கொரோனாவில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு நிதி உதவி

கொரோனாவில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு  நிதி உதவி

காசோலை வழங்கல் 

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவனுக்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ. 1.97 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
திருப்பூர்மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர் இருவரையும் இழந்த சிறுவனுக்கு இளங்கலைப் பட்ட படிப்பு பயில ஓராண்டிற்கான கல்வி கட்டணம் ரூ. 1.97 இலட்சம் மதிப்பீட்டிலான காசோலையை பிரித்திவ் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் சார்பில் வழங்கினார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) ராஜசேகர், நிறுவனர் (பிரித்திவ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம்) பாலன், குழந்தைகள் நலக்குழுத் தலைவர் ஆறுச்சாமி ஆகியோர் இருந்தனர்.

Tags

Next Story