தீ விபத்து!

பொன்னமராவதியில் உள்ள நகைக்கடையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

பொன்னமராவதி நகைக்கடை பஜார்ரில் பூட்டிய நகைக் கடை ஒன்றில் மின் கசிவின் காரணமாக கடையில் தீ விபத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆபரணங்கள் மின்சாதன பொருட்கள் தீயில் முற்றிலுமாக இருந்து நாசம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மேலரத வீதியில் நகைக்கடை பஜாரில் பிரபல நகைக்கடை கடையின் உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நகை கடை பஜார் வீதியில் பிரபல நகைக்கடை ஒன்றிலிருந்து புகை வெளியேறியதை சாலையில் சென்றோர் பார்த்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து நகை கடையின் உரிமையாளர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையின் உரிமையாளர் கதவை பூட்டிய கதவை திறந்து பார்த்தபொழுது கடையிலிருந்து புகையாக வெளியேறியது. மின்வாரிய ஊழியர்கள் தீப்பிடித்து எரிந்து புகைந்த கடைக்குச் செல்லும் மின்சார வயரை துண்டித்தனர்.

அதே வேளையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர்.கடையில் தண்ணீரை பீச்சி அடித்து தீ பரவாத வண்ணம் அனைத்தனர் இருப்பினும் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வெள்ளி பொருட்கள், கம்ப்யூட்டர், மர ஷோகேஸ் டேபிள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இச்சம்பவம் பொன்னமராவதி நகைக்கடை பஜாரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story