கழிவு பஞ்சாலையில் தீ விபத்து

கழிவு பஞ்சாலையில் தீ விபத்து

பஞ்சாலையில் தீ விபத்து 

செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள கழிவு பஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு, இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள செட்டிநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் கழிவு பஞ்சுகளில் இருந்து நூல் தயாரிக்கும் பஞ்சாலையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் ஏராளமான பண மதிப்பிலான பஞ்சுகள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags

Next Story