வடசேரி பஸ் நிலையம் அருகே குப்பையில் பயங்கர தீ  

வடசேரி பஸ் நிலையம் அருகே குப்பையில் பயங்கர தீ  
குப்பைக்கிடங்கில் தீ
நாகர்கோவில் அருகே உள்ள வடசேரி பேருந்து நிறுத்தத்தில் உள்ள குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் டென்னிசன் சாலை இணைக்கும் இணைப்பு சாலை பகுதியில் நேற்று மாலையில் குப்பை கிடங்கில் திடீரென புகை வந்தது. நேரம் செல்ல செல்ல தீ கொழுந்து விட்டு எறிந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இந்த சாலையில் ஏராளமான பார்சல் கூடங்கள் உள்ளன. மேலும் மருத்துவமனை உள்ளதால் உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நாகர்கோவிலில் இருந்து தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைத்தனர். தீயால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் அந்த வழியாக சென்றவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

.

Tags

Read MoreRead Less
Next Story