குடிசை வீட்டில் தீ விபத்து - பொருட்கள் எரிந்து நாசம்

குடிசை வீட்டில் தீ விபத்து - பொருட்கள் எரிந்து நாசம்

சேதமடைந்த வீடு 

குமாரபாளையம் அருகே  குப்பாண்டபாளையத்தில்  குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது.
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே பாரதி, 45 என்ற பெண் தனியாக வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு 09:45 மணியளவில், இவரது குடிசை வீடு எதிர்பாராத விதமாக தீப்பிடித்துக் கொண்டது தகவல் அறிந்த குமாரபாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழுவினர், நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்த பீரோ, கட்டில், பிரிட்ஜ், ஸ்கூட்டி மற்றும் துணிமணிகள், பத்திரங்கள், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை போன்ற அத்தியாவசியமான பொருட்களும் எரிந்து சேதமானது. இத் சேத மதிப்பு மூன்று லட்சம் என்று கூறப்படுகிறது. குடிசை வீட்டில் மின் இணைப்பு இல்லாத நிலையில், தீ விபத்து எப்படி நிகழ்ந்தது? என்பது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story