சாத்தூர் அருகே ஓடும் லாரியில் பயங்கர தீ விபத்து

சாத்தூர் அருகே ஓடும் லாரியில் எதிர்பாராவிதமாக தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு உண்டானது.

சாத்தூர் அருகே ஓடும் லாரியில் பயங்கர தீ விபத்து சாத்தூர் அருகே எட்டூர்வட்டம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் லாரியில் பயங்கர தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நள்ளிரவில் ஆர்.ஆர் நகர் தனியார் சிமெண்ட் ஆலையிலிருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு லாரி எட்டூர் வட்டம் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரியிலிருந்து புகை வந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் அனில் குமார் (வயது 49) லாரியிலிருந்து உடனே கீழே இறங்கியுள்ளார். இதையடுத்து லாரி மலமளவென தீப்பிடித்து எரிந்தது. சம்பவம் அறிந்து சென்ற சாத்தூர் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீ விபத்தில் லாரி முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story