நள்ளிரவில் ஆட்டோவுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் 1வது வார்டு திருவிக நகரில் பேசஞ்சர் ஆட்டோவிற்கு நள்ளிரவில் தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
காங்கேயம் திரு.வி.கா நகரில் முத்துகிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து கொண்டு பேசஞ்சர் ஆட்டோ ஓட்டி வருகின்றார். வழக்கம் போல் நேற்று இரவு 10 மணியளவில் சவாரி முடித்துக் கொண்டு வீட்டின் வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்கச் சென்று விட்டார். திடீரென நள்ளிரவு 12:30 மணியளவில் எது வெடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்க்கும் பொழுது ஆட்டோ கொழுந்து விட்டு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். அதற்குள் ஆட்டோவின் மேற்கூறைகள், ஓட்டுநர் மற்றும் பயணிகள் அமரும் இருக்கைகள் முழுவதும் எரிந்து சேதம் ஆகியது. ஓட்டுநரின் இருக்கைக்கு கீழே இருந்த எல்பிஜி கேஸ் வெடிக்காமல் தடுக்கப்பட்டது. ஒருவேளை கேஸ் வெடித்து இருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். மேலும் அதற்கு முன்னதாக திருவிக நகர் பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பாத்திரம் ஒன்று எடுத்துச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. இது குறித்து ஆட்டோ ஓட்டுனர் காங்கேயம் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story