டைல்ஸ் கடையில் தீ விபத்து-சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதம்!

டைல்ஸ் கடையில் தீ விபத்து-சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதம்!

தீ விபத்து

கோவையில் மின்கசிவு காரணமாக டைல்ஸ் கடையில் தீ விபத்து-பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.
கோவை: பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பியஸ் ஆர் தாத்தே. ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்து எல்லாம் கோவையில் தான்.இவர் பூமார்க்கெட் தேவாங்கபேட்டை பகுதியில் ராஜகுரு என்ற பெயரில் நான்கு மாடி கட்டிடத்தில் டைல்ஸ் மற்றும் சேனிட்டரிவேர்ஸ், சி.பி.பிட்டிங்க்ஸ் உள்ளிட்ட பொருட்களை கடந்த 8 வருடமாக விற்பனை செய்து வருகிறார்.இந்நிலையில இன்று காலை 9.30 மணியளவில் கடையை திறந்தபோது மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.உடனடியாக மின்சாரத்தை துண்டித்த நிலையில் கீழ் தளத்தில் பரவிய தீயால் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கபட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சிறிது நேரத்திற்கு கீழ் தளம் மற்றும் முதல்மாடியில் இருந்து புகை வெளியேறியது. தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதனையடுத்து ஆர் எஸ் புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story