வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

தீ விபத்து 

சாத்தான்குளம் அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 1லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதமானது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை பெருமாள் நகரை சேர்ந்தவர் தர்மராஜ். தொழிலாளியான இவர் நேற்று இரவு அதே ஊரில் கோயில் விழாவில் பங்கேற்க வீட்டை பூட்டி விட்டு மனைவி தங்கபழம் மற்றும் மகனுடன் சென்றுள்ளார். இந்நிலையில் இவரது வீட்டில் திடீரென அங்கிருந்த சிலிண்டர் வெடித்ததில் வீடு தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென எரிய தொடங்கியதையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

உடன் தகவறிந்து திசையன்விளை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், கட்டில், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பள்ளி சான்றிதழ்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

தகவல் அறிந்து தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர், பொண்ணு முனியசாமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். புத்தன்தருவை கிராம நிர்வாக அலுவலர் ராஜபாண்டி மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ததாக உறுதி அளித்தனர்.

Tags

Next Story