மில் தொழிலாளி வீட்டில் திடீர் தீ விபத்து

மில் தொழிலாளி வீட்டில் திடீர் தீ விபத்து

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்

குமாரபாளையத்தில் தனியார் மில் தொழிலாளி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை, கதிரேசன் லைன் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார், 39, தனியார் மில் தொழிலாளி. நேற்று மாலை 06:30 மணியளவில் இவர் வீட்டின் சிமெண்ட் அட்டை மேற்கூரையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்த இவரது மனைவி மலர்கொடி,மகள் பானுமித்ரா, மகன் மனோஜ்குமார், ஆகியோர் தப்பி வெளியே வந்தனர். பூஜை நாள் என்பதால், பானுமித்ரா வீட்டில் சுவாமி படங்களுக்கு முன் தீபம் ஏற்றியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தீ பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நேரில் வந்து தீயை அணைத்தனர். முன்னதாக அவ்வழியே வந்த நகராட்சி கவுன்சிலர் ராஜ், தீ விபத்து ஏற்பட்டது கண்டு, அதிர்ச்சியடைந்து, அக்கம் உள்ளவர்களை ஒன்று திரட்டி, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story