கோழிப்பண்ணையில் தீ விபத்து - ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் எஸ்.மோட்டூரை அடுத்த தீர்த்தமலை பகுதியில் சந்தோஷ் என்பவர் தனது நிலத்தில் கோழி பண்ணை வைத்துள்ளார். இங்கு 4 கொட்டகைகள் அமைத்து அதில் தலா 2,500 கோழிகளை அடைத்து வைத்துள்ளார். இந்த கோழிகள் சில நாட்களில் இறைச்சிக்காக ஏற்றுமதி செய்யப்பட இருந்துள்ளது. இந்த நிலையில் ஒரு கொட்டகையில் திடீரென தீப்பிடித்து உள்ளது.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அதற்குள் அந்த கொட்டகை முழுவதும் எரிந்து 2,500 கோழிகளும் தீயில் கருகி இறந்தன. தீயணைப்பு வீரர்கள் மற்ற மூன்று கொட்டகைகளுக்கும் தீ பரவாமல் தண்ணீரை பீயச்சி அடித்து தடுத்தனர்.இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story