குமாரபாளையம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் வீட்டில் தீ விபத்து

குமாரபாளையம் அருகே  தனியார் நிதி நிறுவன ஊழியர் வீட்டில் தீ விபத்து

தீயணைக்கும் பணி

குமாரபாளையம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.வீட்டில் இருந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவர் மகளிர் குழுவிற்கு சுழல் நிதி வழங்கும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மேலும், சொந்தமாகவும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று காலை பணிக்கு செல்வதற்காக காலையில் குளித்துவிட்டு சாமி கும்பிட விளக்கேற்றி வைத்துவிட்டு பணிக்கு சென்று விட்டார். இந்நிலையில் அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த உடல்நிலை பாதிக்கப்பட்ட அசோக்கின் தந்தையை உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக மீட்டனர் .பின்னர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறை அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் விரைந்து வந்த குமாரபாளையம் தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பாய்ச்சி அடித்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமாகின. இது குறித்து வழக்கு பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story