சீலநாயக்கன்பட்டியில் சோப்பு தயாரிக்கும் குடோனில் தீ விபத்து

சீலநாயக்கன்பட்டியில் சோப்பு தயாரிக்கும் குடோனில் தீ விபத்து

தீ விபத்து 

சீலநாயக்கன்பட்டியில் சோப்பு தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே சிவனேசன் என்பவர் சோப்பு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் குடோனில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவியதால் உடனடியாக அணைக்க முடியவில்லை. இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சோப்பு தயாரிக்க பயன்படும் ஆயில், பிளாஸ்டிக் கேன்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், தீவிபத்துக்கு வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story