சுரண்டை: வைக்கோல் படப்புகளில் தீ விபத்து

சுரண்டை:  வைக்கோல் படப்புகளில்  தீ விபத்து

தீ விபத்து 

சுரண்டை அருகே வைக்கோல் படப்புகளில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் பழனி நாடார் மகன் ஜெயராஜ் (57). இவருக்கு சொந்தமான இடத்தில் அதே ஊரைச் சேர்ந்த 4 பேர் 5 இடங்களில் வைக்கோல் படப்புகள் மாட்டு தீவனத்திற்காக அடைந்து வைத்திருந்தனர். இந்த நிலையில் திடீரென 5 படப்புகளும் தீப்பிடித்து எரிய தொடங்கியது . இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சுரண்டை தீயணைப்பு இன்றைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் நிலைய அலுவலர் போக்குவரத்து பாலச்சந்தர் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து வைக்கோல் படப்புகளில் தீயை அணைத்தனர். அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story