விக்கிரவாண்டியில் தீ விபத்து; கூரை வீடு எரிந்து சாம்பல்

விக்கிரவாண்டியில் தீ விபத்து; கூரை வீடு எரிந்து சாம்பல்

விக்கிரவாண்டி பட்டித்தெருவை சேர்ந்த சாந்தி, தனது கூரை வீட்டை பூட்டி வேலைக்கு சென்ற நிலையில், திடீரென மதியம் 2 மணியளவில் அவரின் வீடு தீப்பற்றி எரிந்தது. 

விக்கிரவாண்டி பட்டித்தெருவை சேர்ந்த சாந்தி, தனது கூரை வீட்டை பூட்டி வேலைக்கு சென்ற நிலையில், திடீரென மதியம் 2 மணியளவில் அவரின் வீடு தீப்பற்றி எரிந்தது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பட்டித்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி சாந்தி (வயது 55). இவர் தனது கூரை வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் சாந்தியின் கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சிய டைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றதுடன், இதுபற்றி விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் கூரை வீடு மற்றும் வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விக்கிரவாண்டி போலீசார், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story