தீக்குச்சி ஏற்றியபோது தீ விபத்து - லாரி எரிந்து சேதம்

சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சிகளை லாரியில் ஏற்றியபோது ஏற்பட்ட தீ விபத்தில் லாரி எரிந்து சேதமானது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் வீராச்சாமி என்பவருக்கும் செந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள நுழைவாயிலில், கழிவு தீக்குச்சிகளை மினி லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வந்தது. அப்போது திடீரென தீப்பற்றி லாரி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அப்போது பணியில் இருந்த கீழ சரவணக்குமார்(28), கலைவாணன்(32) ஆகிய இருவரும் லேசான காயமடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து போலீசார் நடத்திய விசாரணையில் தீக்குச்சிகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

Tags

Next Story