விழுப்புரம் அருகே தீ விபத்து - கூரை வீடுகள் எரிந்து பொருட்கள் சேதம்

விழுப்புரம் அருகே தீ விபத்து - கூரை வீடுகள் எரிந்து பொருட்கள் சேதம்
தீயை அணைக்கும் பணி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சி.மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த பூவன் என்பவரின் மகன் முருகானந்தம்(25) கூலி வேலைக்காக வெளியூர் சென்று உள்ளார். இந்த நிலையில் பூட்டி இருந்த கூரை வீட்டில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். முருகானந்தம் வீட்டில் பற்றி எரிந்த தீயானது அருகாமையில் உள்ள சந்திரா என்பவரது வீட்டிற்கும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் பற்றி எரிந்த தீ ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு முற்றிலுமாக அணைக்கப்பட்டது,தீ பற்றி எரிந்த இரண்டு வீடுகளிலும் இருந்த குடும்ப அட்டை ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் மற்றும் பத்திரங்கள் என இரண்டு லட்சம் மதிப்புலான பொருட்கள் தீயில் முழுவதும் எரிந்து சேதமானது. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் உயிரிழப்புக்கள் ஏதும் இல்லாமல் பொருள் இழப்புகள் மட்டுமே ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. தீப்பற்றிய காரணம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story