மளிகை கடையில் தீவிபத்து - பொருட்கள் சேதம்

மளிகை கடையில் தீவிபத்து - பொருட்கள் சேதம்
சாத்தூரில் காய்கறி மார்க்கெட்டில் உள்ள மளிகை கடையில் தீ விபத்து 30 ஆயிரத்துக்கு அதிகமான மளிகை பொருட்கள் தீயில் கருகி சேதம்*
சாத்தூரில் காய்கறி மார்க்கெட்டில் உள்ள மளிகை கடையில் தீ விபத்து மளிகை பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நாடார் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சாத்தூர் மெயின் பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மளிகை கடையில் இன்று மாலை மின்சார வயர்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக மாடியில் உள்ள குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் மாடியில் அதிக அளவு புகை வருவதை கண்ட பக்கத்து கடைக்காரர்கள் உடனடி யாக சாத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கும் மற்றும் சாத்தூர் நகர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மளிகை பொருட்கள் இந்த தீயில் கருகி சேதமடைந்தன. மேலும் இந்த விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story