இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து !

தீ விபத்து

திண்டுக்கல் ஆர்.எஸ்.சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
திண்டுக்கல் ஆர்.எஸ். ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று வழக்கம் போல் பணிகள் இயங்கி வந்த நிலையில் மாலை ஊழியர்கள் வங்கியை அடைத்து விட்டு சென்று விட்டனர். இன்று அதிகாலை 6.30 மணியளவில் வங்கியில் இருந்து புகை மண்டலமாக வெளியே வந்து கொண்டு இருந்தது. தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கணினி, பொருட்கள் எரிந்து நாசமாகியது. இதைப் பார்த்ததும் அருகில் இருந்த பொதுமக்கள் இது குறித்து திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையில் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Tags

Next Story