கூலித்தொழிலாளி வீட்டில் தீ விபத்து

கூலித்தொழிலாளி வீட்டில் தீ விபத்து
தீ விபத்து
குமாரபாளையம் கூலித் தொழிலாளி வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் ஏரித்தெருவில் மாடியில், சிமெண்ட் அட்டை போடப்பட்ட வீட்டில் வசிப்பவர் ராம்குமார், 45. விசைத்தறி கூலி. நேற்றுமுன்தினம் அதிகாலை 02:00 மணியளவில் திடீரென்று இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இவர் மற்றும் இவரது மனைவி இருவரும் வெளியில் தப்பியோடி வந்தனர்.

தீ மளமளவென பரவி வீட்டில் இருந்த துணிமணிகள், படுக்கை, தலையணை, பாத்திரங்கள், பேன், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் சேதமாகின. இது குறித்து குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தர, நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கு காரணம், மின்கசிவா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story