தலைமையாசிரியர் வீட்டில் தீ விபத்து காவல்துறையினர் விசாரணை

தலைமையாசிரியர் வீட்டில் தீ விபத்து காவல்துறையினர் விசாரணை

காவல்துறை விசாரணை


காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி கயிறுகாரன் கொட்டாய் பகுதியில் தலைமை ஆசிரியர் வீட்டில் தீ விபத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி கயிறுகாரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி ஈஸ்வரி. இவர் கும்பார அள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரவு, இவர்களது வீட்டில் உள்ள அறையில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால், அதிர்ச் சியடைந்த மோகன், ஈஸ்வரி ஆகியோர் அங்கு சென்று பார்த்த போது, அந்த அறையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனே, தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கொளுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில், அந்த அறையில் இருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா..? அல்லது வேறு எதுவும் காரணமா..? என காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story