ராசிபுரம் விசைத்தறி கூடத்தில் தீவிபத்து - அசாம்பாவிதம் தவிர்ப்பு.

ராசிபுரம் விசைத்தறி கூடத்தில் தீவிபத்து - அசாம்பாவிதம் தவிர்ப்பு.

தீயை அணைக்கும் பணி

ராசிபுரம் பகுதியில் வசிப்பவர் சுந்தரராஜன்(62). இவர் ராசிபுரம் புதிய பேருந்து நிலையும் பின்புறம் சரவணா டெக்ஸ் என்ற பெயரில், ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 விசைத்தறி மிசின்களை வைத்து, துண்டு மற்றும் பட்டாடைகளை தயார் செய்து வெளி ஊர்களுக்கு அனுப்பி வருகிறார். இந்நிலையில் விசைத்தறிக்கூடத்தின் மேற்கூரையில் பட்டாசு தீ பொறி விழுந்தது. இதில், மேற்க்கூரையின் சீலிங்கில் இருந்த பஞ்சு எரிந்ததால் புகை மண்டலமாக காட்சியளித்தது. அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்தனர். விரைந்து செயல்பட்டதால் பெரிய அளவிலான தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags

Next Story