துணை மின் நிலையத்தில் தீ விபத்து

ஆவடி அருகே துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடி அருகே துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது வான் உயர கரும்புகை சூழ கொழுந்து விட்டு எரிந்த தீயினை இரண்டு மணி நேரம் போராடி கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்.. சேக்காடு துனை மின் நிலையத்தின் கீழ் 30000ம் மின் இணைப்புகள் இருப்பதால் அருகாமையில் உள்ள மின் நிலையத்திலிருந்து முதற்கட்டமாக தற்காலிக மின் சேவை வழங்க திட்டம்.. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது இதன் எதிரொளியாக பெரும்பாலமான மக்கள் தங்கள் வீட்டில் உள்ள ஏசி பிரிட்ஜ் போன்ற குளிர்சாதன பெட்டி மின்விசிறி உள்ளிட்ட எந்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் சூழலில் குறைவான மின்னழுத்தம் ஏற்பட்டு டிரான்ஸ்பார்மர்கள் பற்றி எரியும் சூழல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஆவடி அடுத்த பட்டாபிராம் சேக்காடு பகுதியில் உள்ள 110 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையத்தில் 16மெகா வால்ட் ஆம்ப் திறன் கொண்ட உயரழுத்த ட்ரான்ஸ் பார்மரில் உள்ள ஆயிலில் மின் கசிவு காரணமாக திடீர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் திரவம் கலந்த தண்ணீரை பீச்சி அடித்து தியை அணைக்க கூடிய பணியில் ஈடுபட்டனர் எனினும் வானுயர கரும்புகள் சூழ்ந்து மள மளவென பற்றி எரிந்து தீயை அணைக்கும் பணி சவாலாக இருந்ததை அடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை பூந்தமல்லி உள்ளிட்ட ஐந்து தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் இவர்களுடன் மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.. வான் உயர புகை எழுந்து குடியிருப்பு பகுதியில் சூழ்ந்ததால் அப்பகுதியில் பொது மக்களுக்கு கண் எரிச்சல்,மூச்சு திணறல் ஏற்பட்டது.சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் தீ விபத்துக்கான ஏராளமான குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது இந்த தீ விபத்து காரணமாக பட்டாபிராம்,சேக்காடு,தண்டுரை,கக்கன்க்கன்ஜீ நகர்,கோபால புரம்,காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. ஏற்கனவே தினம் தோறும் இரவு நேரங்களில் அறிவிக்க படாத மின் வெட்டு நிலவி வரும் சூழலில்,இந்த தீ விபத்து காரணமாக தற்போது பொதுமக்களுக்கு மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.. இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் அய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சரூம் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான நாசர் மின்சார துறை அமைச்சர் மற்றும் மின் உயர் அதிகாரிகளிடம் பேசி புதிய ட்ரான்ஸ் பார்மர்கள் வழங்கி இப்பகுதி மக்களுக்கு விரைவில் மின்சாரம் வழங்கிட கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில் சேக்காடு துணை மின் நிலையத்திலிருந்து முப்பதாயிரம் மின் நுகர்வோர் போல் இருப்பதாகவும் முதற்கட்டமாக அருகாமையில் இருக்கக்கூடிய துணை மின் நிலையத்திலிருந்து தற்காலிக மின் சேவை வழங்க ஏற்பாடு செய்யப் போவதாகவும் பின்னர் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்து மறுசீரமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு மீண்டும் மின் சேவை வழங்கிட வழிவகை செய்யப்படும் என தெரிவித்தனர்.. கோடை காலத்தில் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக மின்சாரம் சேவை பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிக்கு ஆளாகினர்.

Tags

Next Story