மரக்கடையில் தீ விபத்து

மரக்கடையில் தீ விபத்து

தீ விபத்து

சேலம் மாவட்டம்,செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலன் இவர் செவ்வாய்பேட்டை சீதாராம செட்டி சாலை பகுதியில் கிருஷ்ணா டிம்பர்ஸ் மரக்கடை வைத்துள்ளார். இதே போல ஏற்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரும் கிருஷ்ணா டிம்பர்ஸ் அருகே செந்தில்நாதன் டிம்பர்ஸ் என்ற கடை வைத்துள்ளார். நேற்று மாலை வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் மரக்கடையில் திடீரென கரும்புகை கிளம்பி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

தீ மள மள என பரவி அருகில் இருந்த செந்தில் நாதன் டிம்பர்ஸ் கடைக்கும் பரவியது இதனால் தீ கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இது குறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

ஆனாலும் தீ வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயனைப்பு துறையினர் தீயை அணைத்து முடிப்பதற்குள் இரண்டு கடைகளிலும் இருந்த மரக்கட்டைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ரூ 2 கோடி மதிப்பிலான தேக்கு மரக்கட்டைகள் எரிந்து போனதாக தெரிகிறது எனக்கூறினார்.

Tags

Next Story