வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு துறையின

பெரம்பலூரில் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.

பெரம்பலூர் நகர் வடக்கு மாதவி சாலை தில்லை நகர் பகுதியில் குடியிருந்து வருபவர், தேவராஜ் மகன் சுரேஷ் இவரது வீட்டில் மே 12ம் தேதி இரவு 7:30 மணி அளவில் வீட்டு வாசல் வழியாக பாம்பு உள்ளே நுழைந்ததை வீட்டின் உரிமையாளர் சுரேஷ் பார்த்து உள்ளார், இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு, தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் நவீன உபகரணங்கள் கொண்டு சுமார் 4 அடிக்கு மேல் நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்து அதனை , எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்,

இதனையடுத்து தீயணைப்புத் துறைவீரருக்கு சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். பெரம்பலூர் நகர் பகுதியில் வீட்டில் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags

Next Story