கிணற்றில் விழுந்த நபரை மீட்ட தீயணைப்புத்துறையினர்

கிணற்றில் விழுந்த நபரை மீட்ட தீயணைப்புத்துறையினர்

கிணற்றில் விழுந்து மேலே வர முடியாமல் தவித்த நபரை மீட்ட தீயணைப்புத்துறையினர்


சங்கரன்கோவில் அருகே குவாளைங்கண்ணி யில் கிணற்றில் விழுந்து மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குவாளைங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து மேலே வர முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையின் அருகே தகவல் கிடைத்துள்ளது.

விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராமகிருஷ்ணனை பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கண்டா அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையை வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story