தென்காசியில் நல்ல பாம்பை மீட்ட தீயணைப்புத் துறை

தென்காசியில்  நல்ல பாம்பை மீட்ட  தீயணைப்புத் துறை
தென்காசியில் பள்ளி கட்டடத்திற்குள் புகுந்த நல்ல பாம்பு தீயணைப்புத் துறையினர் மீட்பு
தென்காசியில் பள்ளி கட்டடத்திற்குள் புகுந்த நல்ல பாம்பு தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி ஏஜி பள்ளி உள்ளே 3 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு பதுங்கி இருந்ததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தென்காசி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் . தகவல் அறிந்த தென்காசி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் ஜெயரத்தினகுமார், வீரர்கள் வெள்ளை பாண்டியன், கார்த்தியன், மணிகண்டன் ஆகியோர் விரைந்து சென்று பள்ளியில் பதுங்கி இருந்த நல்ல பாம்பினை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதைக் கண்ட அப்பகுதி பள்ளி ஆசிரியர்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story