குப்பை கிடங்கில் தீ விபத்து

குப்பை கிடங்கில்  தீ விபத்து

குப்பை கிடங்கு


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம்பாளையம் பேரூராட்சிக்கு சொந்தமான, குப்பை கிடங்கு ஒன்று ஆயக்காட்டூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் மாலை 4 மணி அளவில் குப்பை கிடங்கில் உள்ள ஒரு பகுதியில் தீ மளமளவென பரவியது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உடனடியாக வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அங்கு விரைந்த தீயணைப்பு நிலைய செயல் அலுவலர் செங்கோட்டுவேல் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் முழுமையாக அணைத்தனர். மேலும் பட்டாசு வெடிப்பின் பொழுது எதிர்பாராதவிதமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story