நள்ளிரவில் கடையில் தீ :பொருள்கள் எரிந்து சாம்பலானது

நள்ளிரவில் கடையில் தீ :பொருள்கள் எரிந்து சாம்பலானது
கடையில் எரிந்த பொருட்கள்
மார்த்தாண்டம் அருகே நள்ளிரவில் கடையில் தீ பற்றி எரிந்ததால் பொருள்கள் எரிந்து சாம்பலானது .
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (60) இவர் மேல்புறம் சந்திப்பில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் இரவு கடை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதற்கிடையே நள்ளிரவில் கடை திடீரென தீப்பற்றி எரிவதாக அந்தப் பகுதி சேர்ந்தவர்கள் தங்கராஜிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே விரைந்து சென்று பார்த்தபோது கடை முழுவதும் தீயில் எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் போராடித் தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கடையில் உள்ள இருந்த பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்தது தெரியவந்தது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் கடையில் உள்ளே இருந்த பழங்கள் மற்றும் கார வகைகள் எரிந்து சாம்பலாகி உள்ளது. மேலும் கடை மேஜை டிராயதில் இருந்த ரூபாய் 2 ஆயிரம் பணமும் எரிந்து சாம்பலானது.

Tags

Next Story