குடிசை வீட்டில் தீ விபத்து - போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

குடிசை வீட்டில் தீ விபத்து - போராடி தீயை அணைத்த தீயணைப்பு  வீரர்கள்

குடிசை வீட்டில் தீ விபத்து

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சி கரையூர் திடீர் நகர் பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி(40) கூலித் தொழிலாளி. அப்பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.இந்நிலையில் வெள்ளைச்சாமி தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்ற நேரத்தில் அவர்களது குடிசை வீட்டில் விபத்து ஏற்பட்டு குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது.உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் இதுகுறித்து நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து,நத்தம் தீயணைப்பு நிலை அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

Tags

Next Story