தர்மபுரி நகர பகுதியில் தீ விபத்து

தர்மபுரி நகர பகுதியில் தீ விபத்து

தீ விபத்து

நேதாஜி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு பணி வீரர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ கிருஷ்ணா பர்னிச்சர் இதன் அருகாமையில் சவுத் இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் கிராம வங்கி உள்ளிட்ட வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென ஸ்ரீ கிருஷ்ணா பர்னிச்சரில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மல மலவென பரவி வங்கி கட்டிடத்திற்கும் சென்று தீ அதிகரித்து நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story