தேன்கனிக்கோட்டையில் தீ விபத்து : பொருட்கள் எரிந்து நாசம்

தேன்கனிக்கோட்டையில்  தீ விபத்து : பொருட்கள் எரிந்து நாசம்

தீ விபத்து ஏற்பட்ட வீடு

தேன்கனிக்கோட்டையில் பூட்டி இருந்த வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பணம் எரிந்து நாசமகின.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கோகுல் நகர் என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஜெகதீஷ் (48) இவர் அங்கு ஹார்டுவேர் கடையில் நடத்தி வருகிறார். நேற்று மாலை ஜெகதீஷ் கடையில் இருந்த நிலையில் அவரது வீட்டில் இருந்த மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தெருவில் நடை பயிற்சிக்காக சென்றுள்ளனர்.

' இந்த நிலையில் ஜெகதிஷின் வீட்டின் ஜன்னல் பகுதியிலிருந்து திடீரென புகை அதிக அளவில் வந்துள்ளது. சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் தீயில மளமளவென எரிந்துள்ளன. இதனை அந்த வழியாக சென்றவர்கள் தீ விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி, கட்டில் மெத்தை, பீரோ அதிலிருந்த பணம் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் என 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட பின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story