திருப்பூர் அட்டை குடோனில் தீ விபத்து.

திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அட்டை குடோனில் தீ விபத்து.

திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் அட்டை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பான பொருட்கள் சேதம் அடைந்தன.

திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான குடோனில் மதியம் ஒரு மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கரும்பு புகை எழும்பி காற்று மாசு ஏற்பட்டதுடன், அந்த பகுதி கரும்புகையால் சூழ்ந்தன. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலைகளில் கூடினர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் மூன்று வாகனங்களைக் கொண்டு தீயை அணைக்க போராடினர்.

மேலும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றம் செய்து பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் அப்பகுதியில் இருந்து கலைய செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து வழக்கு பதிவு செய்து புதிய விசாரணை கொண்ட பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனத்தில் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story