தீ நெருப்பால் ஏற்படும் விபத்து குறித்தான தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீ நெருப்பால் ஏற்படும் விபத்து குறித்தான தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீத்தடுப்பு விழிப்புணர்வு

தீ மற்றும் நெருப்பால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்தான விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நிலைய எல்லைக்கு உட்பட்ட கோவிலாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
ராமநாதபுரம் சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நிலைய அலுவலர் முத்து தலைமையில் மீட்பு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்த்திக்காட்டினர். எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் போது உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், எரிவாயு கசிவு மற்றும் மின் கசிவால் ஏற்படும் தீயை பயமின்றி பாதுகாப்பாக கையாள்வது குறித்து விவரிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவிலாங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவிப்பணியாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

Tags

Next Story