சமையல் செய்த போது தீ விபத்து - பெண் சாவு

சமையல் செய்த போது தீ விபத்து - பெண் சாவு

பெண் சாவு

சமையல் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்தில், தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வாணாபுரம் அடுத்த இளையனார்குப்பத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் மனைவி கிருத்திகா, 27; ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 9ம் தேதி கிருத்திகா சமையல் செய்வதற்காக விறகு அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிய வைத்தார். அப்போது, எதிர்பாராத விதமாக புடவையில் தீ பரவியதில் படுகாயமடைந்தார். உடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story