காருக்கு கியாஸ் நிரப்பும்போது தீ விபத்து - வாகனங்கள் சேதம்

கந்தம்பாளையம் அருகே ஆம்னி காருக்கு கியாஸ் நிரப்பும்போது ஏற்பட்ட தீ விபத்தில் மொபட் மற்றும் வீட்டின் முன் கூரை எரிந்து சாம்பலானது.

பரமத்தி வேலூர் தாலுகா செருக்கலை புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் காய்கறி வியாபாரத்தை முடித்துக் கொண்டு தனக்கு சொந்தமான ஆமனி காரை அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரது வீட்டின முன் நிறுத்தி ஆம்னி காரில் சிலிண்டருக்கு வீட்டு உபயோக சிலிண்டரில் இருந்த கியாஸை நிரப்பி கொண்டிருந்தார். அப்போது ஆம்னி காரில் இருந்த கியாஸ் திடீரென தீப்பிடித்தது. இதில கார் தீ பிடித்தது.

இந்த தீ கார் முழுவதும் தீ மளமளவென பரவி அங்கு நிறுத்தியிருந்த குப்புசாமிக்கு சொந்தமான மொபட்டில் தீ பற்றிக் கொண்டது. காரும் மொபட்டும் தீயில் கொளுந்து விட்டு எரிந்தது. மேலும் தீ குப்புசாமியின் வீட்டின் முன் பகுதியில் போடப்பட்டிருந்த கூரையிலும் தீ பிடித்து பற்றி எரிய உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீயை அனைக்க முடியாததால் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் மாவட்ட உதவி அலுவலர் வெங்கடாசலம் நிலைய அலுவலர் சிவக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து ஆமனி கார் மொபட்ட கூரையில் எரிந்து கொண்டிருந்தை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து அருகில உள்ள வீடுகளுக்கு பரவாமல் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குறித்து தீ பற்றி எரிந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story