விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன் கோவில்பட்டி பகுதியைச் சார்ந்தவர் அப்துல் ரகுமான் வயது 45 இவர் பட்டாசு ஆலையில் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருடைய தந்தை ஜமால் அகமது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் அப்துல் ரகுமான் பார்த்து வந்ததாகவும் அவருடைய தந்தை இறப்பதற்கு முன்பாக தனது சொத்தை அப்துல் ரகுமான் பெயருக்கு எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

தந்தை உயிரிழந்த நிலையில் அவருடைய சொத்தை அப்துல் ரகுமானின் அண்ணன் ரகமத்துல்லா சொத்துக்களை கேட்டு தம்பியை மிரட்டி வருவதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்துல் ரகுமான் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த கடந்த ஆறு நாட்கள் ஆகியும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அவர் அப்துல் ரகுமான் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அளித்துச் சென்றனர்.

Tags

Next Story