பட்டாசு தாயரிப்பு மூலப்பொருள் பதுக்கல் - 2 பேர் கைது

பட்டாசு தாயரிப்பு மூலப்பொருள் பதுக்கல் - 2 பேர் கைது
காவல் நிலையம் 
விருதுநகர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்களை பதிக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வேல்முருகன். இவர் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒண்டிப்புலி நாயக்கனூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த சிவமுருகன் மற்றும் தவமணி ஆகியோரை சோதனை செய்ததில் அவர்கள் வீட்டிற்கு அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் குழாய்கள் மற்றும் கருந்திரி வைத்திருப்பது தெரியவந்தது அடுத்த காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து சிவ முருகன் மற்றும் தவமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story