பட்டாசு தயாரிப்பு மூலப்பொருட்கள் பதுக்கல் - 3 பேர் கைது

பட்டாசு தயாரிப்பு மூலப்பொருட்கள் பதுக்கல் - 3 பேர் கைது
காவல் நிலையம் 
விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் விலக்கில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் விலக்கில் சட்டவிரோத பட்டாசு தயாரிக்க மூலபொருட்களை பதுக்கியதால் வெடிவிபத்து ஏற்பட்டது இந்த நிலையில் இதற்கு காரணமான செல்வராஜ் 46, முனியசாமி 48, முருகன் 58 என மூவரையும் ஆமத்துார் போலீசார் கைது செய்தனர் .தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். ஆனைகுட்டத்தில் இவருக்கு சொந்தமான இடத்தில் புதியதாக பட்டாசு கடை திறப்பதற்கு கட்டடம் கட்டி வந்தார். இதற்கு பின்னால் தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்து வந்த நிலையில் பாறைப்பட்டியைச் சேர்ந்த முனியசாமி, சிவகாசியின் போஸ்காலனியைச் சேர்ந்த முருகன், செட்டின் அருகே கம்பிகளை வெல்டிங் வைத்த போது தீப்பொறி ஏற்பட்டு மூலப்பொருட்கள் எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படாத நிலையில் சட்ட விரோதமாக மூலப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த காரணத்திற்காக செல்வராஜ், முனியசாமி, முருகனை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story