சங்கரன்கோவில் அருகே பட்டாசுகள் வெடித்து சிதறல்: ஒருவர் பலி

சங்கரன்கோவில் அருகே பட்டாசுகள் வெடித்து சிதறல்: ஒருவர் பலி
தரைமட்டமான வீடு
சங்கரன்கோவில் அருகே வீட்டில் பட்டாசுகள் திடீரென வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலியானார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கொக்கு குளம் பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி இவரது கணவர் சதிஷ்வரன் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த நிலையில் இவர் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது மனைவி ஊரான கொக்குகுளம் பகுதியில் கடந்த கடந்த ஆறு மாதங்களாக தங்கி பணிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் ஊரார் யாருக்கும் தெரியாமல் பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்து வந்ததாக தற்போது தெரிய வருகிறது.

மேலும் இவர் வீட்டில் வைத்திருந்த வெடிமருந்து இன்று காலை திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது இந்த நிலையில் வீட்டிலிருந்த சதீஸ்வரன் அவரது உடல் பல்வேறு இடங்களுக்கு சிதறப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது மனைவி வீட்டிற்கு சிறிது தூரம் நின்றதால் அவருக்கு காயம் ஏற்பட்டு அவர் தற்போது சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் வெடி விபத்து ஏற்பட்ட வீடானது தரைமட்டமாகி அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மேற்கூரைகள் சேதமாகி உள்ளது.

இந்த நிலையில் தகவல் அறிந்த சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் டிஎஸ்பி சுதீர் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பிற வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்....

Tags

Next Story