தனியார் தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்

தனியார் தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்

தீ விபத்து 

கொடைக்கானல் பழைய அப்பர் லேக் வியூ சாலையில் தனியார் தோட்டத்தில் பற்றி எரிந்த தீ,தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக க பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் இன்று மாலை வேளையில் பழைய அப்பர் லேக் வியூ சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள புல்வெளியில் தீ பற்றி, மளமளவென தீ பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தனியார் தோட்டத்தில் விவசாய பணிகளுக்கு தோட்டத்தினை சுத்தம் செய்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் தீ வைத்தார்களா அல்லது தீ பற்றியது காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story