அடுத்தடுத்து இளம் பெண்களின் உயிரை பறித்த தீ - போலிசார் விசாரணை.

அடுத்தடுத்து  இளம் பெண்களின் உயிரை பறித்த தீ - போலிசார் விசாரணை.

உயிரிழந்த இளம்பெண் 

கலவை அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இரண்டு இளம்பெண்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள ஆரூர் கிராமம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி - வள்ளி இவரது மகள் லட்சுமி (17) வயிற்று வலி காரணமாக கடந்த 12 தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை முயற்சி செய்துள்ளார். அப்போது வீட்டின் உறவினர்கள் லட்சுமியை மீட்டு வேலூர் அரசு அடுக்கும்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த லட்சுமி ஆறு நாட்களுக்குப் பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது தொடர்பாக வாழைப்பந்தல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் ஆற்காடு அருகே உள்ள வளையாத்தூர் கிராமம் ஓம் சக்தி கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் ஜோதி தம்பதியரின் மகள் வினிதா (19) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்ற நிலையில் காரணமாக கடந்த 11ஆம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்துக் கொண்டார். உடனடியாக உறவினர்கள் வினிதாவை மீட்டு வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த வினிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திமிரி காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இளம் பெண்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்தந்த கிராமத்தில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Tags

Next Story