முதலாம் ஆண்டு விழா

முதலாம் ஆண்டு விழா

  மரக்காணம் மதுரை வீரன் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களின் பம்பை உடுக்கை சிலம்பு நல சங்கத்தின் சார்பில் முதலாம் ஆண்டு விழா நடந்தது. 

மரக்காணம் மதுரை வீரன் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களின் பம்பை உடுக்கை சிலம்பு நல சங்கத்தின் சார்பில் முதலாம் ஆண்டு விழா நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மதுரை வீரன் அனைத்து நாட்டுபுற கலைஞர்களின் பம்பை உடுக்கை சிலம்பு நல சங்கத்தின் சார்பில் மரக்காணத்தில் முதலாம் ஆண்டு கலை நிகழ்ச்சி விழா நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் உடுக்கை ஆசிரியர்கள் பாவாடை யாகாம்புரம் சங்கத்தின் பொதுச்செயலாளர் வீரன் கௌரவத் தலைவர் துணைத் தலைவர்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் நலிவடைந்து வரும் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை எவ்வாறு பாதுகாப்பது இந்தக் கலைகளை வரும் தலைமுறைகளுக்கு எப்படி கற்றுக் கொடுப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி மரக்காணம் பூமி ஈஸ்வரர் கோயில் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக நடைபெற்றது.

Tags

Next Story