மக்களுடன் முதல்வா் சிறப்புத் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வா் சிறப்புத் திட்ட முகாம்

அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் 'மக்களுடன் முதல்வா்' சிறப்புத் திட்ட முகாம் நடைபெற்றது.

அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் 'மக்களுடன் முதல்வா்' சிறப்புத் திட்ட முகாம் நடைபெற்றது.
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை 'மக்களுடன் முதல்வா்' சிறப்புத் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் பூங்கொடிமுருகு தலைமை வகித்தாா். முகாமை பேரூராட்சித் தலைவா் எஸ்பி.செல்வராஜ் தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் விமல்குமாா் வரவேற்றாா். முகாமில், காலை முதலே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு மனு அளித்தனா். முகாமில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பேரூராட்சித் தலைவா், அதிகாரிகள் அவரின் இடத்துக்கே சென்று சக்கர நாற்காலி, மாற்றுத்திறனாளி உதவித் தொகையை வழங்கினா்.

Tags

Next Story