அரசு கலைக்கல்லூரியில் முதலாம்ஆண்டு வகுப்புகள் துவக்கம் !

அரசு கலைக்கல்லூரியில் முதலாம்ஆண்டு வகுப்புகள் துவக்கம் !

வகுப்புகள் துவக்கம்

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கியது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நேற்று துவங்கியது. ஜூலை 10 வரை இளங்கலை மற்றும் இளமறிவியல் முதலாம் ஆண்டு சேர்க்கை மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

கல்லூரி முதல்வர் ரேணுகா கூறியதாவது: கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்காத மாணவர்கள் ஜூலை 5 வரை ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். உதவிக்கு கல்லூரியின் சேர்க்கை உதவி மையத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கான கலந்தாய்வு ஜூலை 8ல் நடைபெறும்.

மேலும் ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்து கல்லூரியில் சேராத மாணவர்கள் ஜூலை 8ல் கல்லூரிக்கு வந்து மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story