குட்டுப்பட்டி-கிழவன் குளத்தில் மீன்பிடி திருவிழா

குட்டுப்பட்டி-கிழவன் குளத்தில்  மீன்பிடி திருவிழா

மீன் பிடிக்கும் கிராம மக்கள் 

நத்தம் அடுத்துள்ள குட்டுப்பட்டி-கிழவன் குளத்தில் நடந்த மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் ஆர்வமுடன் மீன் பிடித்து தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள குட்டுப்பட்டியில் கிழவன்குளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் வற்றியதை தொடர்ந்து ஆயக்கட்டுதாரர்கள் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடி வெடித்து கண்மாயில் மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

இதை தொடர்ந்து குட்டுப்பட்டி, லட்சுமிபுரம், பஞ்சையம்பட்டி, ஒத்தினிப்பட்டி போன்ற சுற்றுவட்டாரம் நத்தம், சிறுகுடி, சிங்கம்புணரி பகுதிகளிலிருந்தும் ஊத்தா, வலை, மூங்கில் கூடை போன்ற மீன் பிடி சாதனங்களுடன் குளத்தில் இறங்கி ஆர்வத்துடன மீன் பிடிக்க தொடங்கினர்.

இதில் கட்லா, விறால், ஜிலேபி, லோகு போன்ற மீன் வகைகளை பிடித்து சென்றனர். இதில் பிடித்த மீன்களை வந்தவர்கள் தங்களுக்குள் பங்கிட்டு மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

Tags

Next Story