சிறுமியிடம் செயின் பறித்த மீனவர் கைது

சிறுமியிடம் செயின் பறித்த மீனவர் கைது

கொல்லங்கோடு அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் செயின் பறித்த மீனவர் கைது செய்யப்பட்டான்.


கொல்லங்கோடு அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் செயின் பறித்த மீனவர் கைது செய்யப்பட்டான்.
கொல்லங்கோடு அருகே நீரோடி கோவில்விளா கம் பகுதியை சேர்ந்தவர் மரிய அசோக். மீன் பிடி தொழிலாளி.இவரது பதினொன்று வயது மகள் காலை வீட்டின் அருகே நின்ற ஆட்டோவில் ஏறி விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு பைக்கில் வந்த தக்க நபர் சிறுமியிடம் நைசாக பேசி கழுத்தில் கிடந்த கவரிங் செயினை பறித்து சென்றுள்ளார். இது குறித்து சிறுமி பெற் றோரிடம் கூறியுள்ளார். இது சம்பந்தமாக மரிய அசோக் கொல் லங்கோடு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் தாமஸ் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தூத்தூரை சேர்ந்த ஜோஸ் ராபின் என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story