மதுபோதையால் மீனவர் பலி

மதுபோதையால் மீனவர் பலி

மீனவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்குடி பகுதியில் மது போதையில் தவறி விழுந்து மீனவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் , பேராவூரணி அடுத்த செல்லப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்(57). மணமேல்குடியை அடுத்த புதுக்குடி கிராமத்தில் தங்கி நாட்டுப்படகு மூலம் மீன்பிடி தொழில் செய்து வந்தார். சம்பவத் தன்று கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய இவர் மணமேல்குடியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார்.

மது அருந்திவிட்டு வீடு திரும்பும்போது, போதையில் நிலைதடுமாறி அங்கு கிடந்த கல் மீது விழுந்தார். இதில் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த தாமரைச்செல்வனை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தா ரைச்செல்வன் உயிரிழந்தார். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story