நடுக்கடலில் சங்கு குளிக்க சென்ற மீனவர்  மூச்சுத் திணறி பலி

நடுக்கடலில் சங்கு குளிக்க சென்ற மீனவர்  மூச்சுத் திணறி பலி

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் சங்கு குளிக்க சென்ற மீனவர்  மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் சங்கு குளிக்க சென்ற மீனவர்  மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ஜலாலுதீன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த சம்சுதீன் மகன் சபர் மைதீன் (33) என்பவர் உள்பட 10 மீனவர்கள் நேற்று அதிகாலையில் சங்கு குளிக்க சென்றனர். அவர்கள் திரேஸ்புரத்தில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் சங்குகுளித்துக் கொண்டு இருந்தார்களாம். அப்போது கடலுக்குள் சென்ற சபர் மைதீனு்க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக சக மீனவர்கள் அவரை கரைக்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து தூத்துக்குடி தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story