கடலில் மூழ்கி மீன்பிடி தொழிலாளி பலி

கடலில் மூழ்கி மீன்பிடி தொழிலாளி பலி
பைல் படம்
வள்ளவிளை பகுதியில் கடலில் நீந்தி கொண்டிருந்த மீன்பிடி தொழிலாளி அலையில் சிக்கி கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே ததேயுபுரத்தை சேர்ந்தவர் எல்பின் (34). மீன்பிடி தொழிலாளியான இவர் நேற்று மாலை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வள்ள விளை பகுதியில் கடலில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட அலையில் சிக்கி எல்பின் மற்றும் அவரது நண்பரும் அலையில் சிக்கி உள்ளனர். இதில் நண்பர் நீந்தி கரையேறி உள்ளார். எல்பின் கடலில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த மீனவர்கள் எல்பினை மீட்டு, சிகிச்சைக்காக பாயுசாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்தவன் டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story